Statue of Palani Murugan used as medicine for the people - Hogar | Yoga with Mahe

பழனி முருகன் சிலை மக்களுக்கு மருந்தாக பயன்படுவிதம் - போகர்.




வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க நாம் இன்றைய பதிவாக பார்க்க இருப்பது இதற்கு முந்திய பதிவில் நவ பாஷாண சிலை ஏன் உருவாக்கப்பட்டது எப்படி உருவாக்கப்பட்டது என்பது பற்றிய முழு தகவல்களை பார்த்தோம் அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த பதிவும் இருக்கப்போகிறது என்பதை கூறிகொள்கிறேன்.

அதாவது முந்திய வீடியோவில் நவபாஷாண சிலையின் அர்த்தம் நவ என்பது ஒன்பது என்று பொருள்படும் பாஷாணம் என்பது விஷம் என்று பொருள் படும் ஒன்பது வகையான விஷங்களை கொண்டு நவபாஷாண சிலை அதாவது பழனி மலையில் இருக்கும் முருகன் சிலையை போகர் பெருமான் செய்தார் என்பதையும் அதை எப்படி செய்தார் என்ற தகவலையும் அதோடு அதை மக்களின் ஆரோக்கியத்தை காக்கும் பொருட்டே உருவாக்கினார் என்ற காரணத்தையும் தெரிந்து கொண்டோம்.

அந்த பதிவில் நமக்கு ஒரு கேள்வி வந்திருக்கும் ஒரு விஷம் எப்படி நமக்கு மருந்தாக பயன்படும் என்ற சந்தேகம் நமக்கு வந்திருக்கும் அது எப்படி மருந்தாக பயன்படுகிறது அதில் எந்த மாதிரியான பாஷாணம் சேர்க்கப்பட்டிருக்கிறது அதன் தன்மை என்ன அவை பயன்படும் விதம் அதன் மூலக்கூறு என்ன என்பதை இந்த தகவலில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
அதோடு 2500 வருடத்திற்கு முன் போகர் கொடுத்த அந்த சிலையின் மருத்துவ குறிப்பு இப்போது இருக்கும் மக்கள் தொகைக்கு பயன்படுமா அனைவருக்கும் எந்த முறையில் கொடுக்கவேண்டும் என்பது பற்றிய தகவலை மேலே உள்ள வீடியோ லிங்க் இல் கொடுத்துள்ளேன் அதை பார்த்து அது பற்றிய கருத்துக்களை கீழே கமெண்ட் இல் பதிவுசெய்யவும்.
வாழ்க வளமுடன்

Post a Comment

0 Comments